இனிமேல் என் பக்கத்துல படுத்துகிட்டு குறட்டை விடுவ...! கடுப்பான குழந்தை செய்த காரியம்... வைரலாகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jan 23, 2020 07:07 PM

இரவில் படுத்தவுடன் குறட்டை விட்டு தூங்குவது வரம். அவ்வரம் பெற்றவர் நம் அருகில் தூங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கு கிடைத்தால் அது சாபம். சிலருக்கு இந்த குறட்டை விடும் சத்தம் கேட்டால் இரவு தூக்கம் வராது .

Be sure to kurattaivitum fathers - Viral Video

ஆண், பெண் என இருபாலரும் குறட்டை விடுவர். இது ஒரு சிரிப்பிற்குரிய விஷயம் கிடையாது. இதனால் உலகில் உள்ள பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில கணவன், மனைவியருக்கு இடையே இந்த குறட்டை சத்தம் கருத்து வேறுபாட்டை கூட ஏற்படுத்தியுள்ளது.

குறட்டை இவ்விதம் பலரை பாடாய் படுத்த குறட்டையிட்ட தந்தையை, குழந்தை ஒன்று பாடாய் படுத்திய வீடியோ டிக்டாக்கில் வைரலாகி வருகின்றது.

 

Tags : #BABY