darbar USA others

2 வயது ‘பெண்’ குழந்தையை... வீட்டில் ‘தனியாக’ விட்டுச் சென்ற குடும்பத்தினர்... ‘அலட்சியத்தால்’ அடுத்து நடந்த ‘பயங்கரம்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jan 07, 2020 09:56 PM

புதுச்சேரியில் தனியாக வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை உள்அலங்கார உபகரணங்கள் சரிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Familys Carelessness Kills 2 Year Old Girl Baby In Puducherry

புதுச்சேரி டி.என்.பாளையம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி இளவயதன் - முத்துலட்சுமி. இளவயதன் சுப நிகழ்ச்சிகளுக்கு உள்அலங்காரம் செய்யும் தொழில் செய்து வரும் நிலையில், முத்துலட்சுமி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் தனனியா என்ற பெண் குழந்தையும், 8 மாத ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிடும் நேரங்களில் 2 குழந்தைகளையும் இளவயதனின் தாய் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இளவயதனின் தாய் 8 மாத ஆண் குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவை வாங்க அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தனனியா உள்அலங்கார உபகரணங்கள் வைத்திருந்த அறைக்குள் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த உபகரணம் ஒன்றை தனனியா இழுத்தபோது, அருகிலிருந்த மர பலகைகள், இரும்புச் சட்டங்கள் ஆகியவை அவர்மீது சரிந்து விழுந்துள்ளது.

இதில் பலத்த காயமடைந்த குழந்தை தனனியா அப்படியே மயங்கியுள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த இளவயதனின் தாய் உபகரணங்கள் சரிந்து விழுந்து குழந்தை நசுங்கிக் கிடப்பதைப் பார்த்து அலறியுள்ளார். அந்த சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #PUDUCHERRY #BABY #FAMILY