darbar USA others

‘அசுர’ வேகத்தால்... கண் இமைக்கும் நேரத்தில்... ‘அரசுப் பேருந்து’ மீது ‘கார்’ மோதி ‘கோர’ விபத்து...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 06, 2020 10:59 PM

கொடைரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அரசுப் பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

3 Died In Car Government Bus Accident In Dindigul

சென்னையைச் சேர்ந்த நரசிம்மன் என்பவர் தனது மகள் சம்யுக்தா, மகன் அஸ்வின், மைத்துனர் அண்ணாசாமி, நண்பர் சுந்தர் ஆகியோருடன் சில தினங்களுக்கு முன்பு காரில் சபரிமலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்து ஊர் திரும்பும் வழியில், திண்டுக்கல் கொடைரோடு அருகே அதிவேகத்தில் சென்ற அவர்களுடைய கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பையும் தாண்டி எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த நரசிம்மன் (40), அண்ணாசாமி (45), சுந்தர் (42) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் படுகாயமடைந்த சம்யுக்தா, அஸ்வின் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #DINDIGUL #CAR #GOVERNMENTBUS #FATHER #DAUGHTER #SON