VIDEO: ‘ஏடிஎம்மில் பணம் வரல’!.. ஆத்திரத்தில் ‘லாரி டிரைவர்’ செய்த செயல்.. பரபரப்பை கிளப்பிய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 06, 2020 11:38 AM

பணம் வராத ஆத்திரத்திரத்தில் நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man broke ATM machine after not getting money in Dindigul

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் இந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டிள்ளது. இந்த நிலையில் ஏடிஎம் இயந்திரத்துக்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. பலமுறை முயன்று பார்த்தும் பணம் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அவர் ஏடிஎம் இயந்திரத்தை காலால் எட்டி உதைத்து, பின்னர் கல்லை எடுத்து ஏடிஎம் இயந்திரத்தின் மீது வீசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைத்தவர் சேவுகம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Credits: Vikatan

Tags : #CCTV #ATM #DINDIGUL