‘10 மாத பேத்தியுடன்’ வெளியே சென்ற.. ‘தாத்தா செய்த பதைபதைக்க வைக்கும் காரியம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 30, 2019 05:35 PM

பொள்ளாச்சியில் 10 மாதமே ஆன சொந்த பேத்தியை ஒருவர் கல்லால் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 months old baby brutally murdered by grandfather in Pollachi

பொள்ளாச்சி அருகே கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது முதல் மனைவியைப் பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, மகன் குமார், மருமகள் முத்துமாலை மற்றும் 10 மாத பேத்தி தர்ஷினி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் இரண்டாவது மனைவியும் செல்வராஜை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று முத்துமாலையிடம் இருந்து பேத்தியை கட்டாயப்படுத்தி வாங்கிய செல்வராஜ் இரு சக்கர வாகனத்தில் எங்கேயோ கிளம்பிச் சென்றுள்ளார். வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து செல்வராஜின் செல்ஃபோன் சிக்னல் மூலம் அவரைக் கண்டுபிடித்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் குழந்தையைக் கல்லால் அடித்துக் கொன்று விட்டதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடந்த போலீஸார் மேலும் விசாரித்து குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர். 

மேலும் அவர் தன்னுடைய இரண்டாவது மனைவி பிரிந்து செல்ல மருமகளும், பேத்தியும் தான் காரணம் என நினைத்தே பேத்தியைக் கொன்றதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இரண்டாவது மனைவி பிரிந்து சென்றதற்காக 10 மாதமே ஆன பேத்தியை ஒருவர் கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #POLLACHI #10MONTHSOLD #GIRLBABY #GRANDFATHER #BRUTALMURDER