legend others

‘சிக்கன் பக்கோடா கேட்டு அடம்பிடித்த குழந்தைக்கு’ நடந்த பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 19, 2019 07:46 PM

திருவள்ளூர் அருகே சிக்கன் பக்கோடா கேட்டு அடம் பிடித்த சிறுமியை இளைஞர் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 year old girl brutally murderded near Tiruvallur

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் என்பவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஞாயிறன்று அமீரின் உறவினரான நிலக்கர் என்பவருடன் வெளியே சென்ற குழந்தை காணாமல் போயுள்ளது. மகளைத் தேடிச் சென்ற போது மது போதையில் இருந்த நிலக்கர் தெளிவாக பதிலளிக்காததால் அமீர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் திங்கட்கிழமை காலை அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையின் பின்புறம் உள்ள முட்புதரில் காணாமல் போன குழந்தை பலத்த காயங்களோடு சடலமாகக் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நிலக்கரைக் கைது செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் குழந்தையை அடித்துக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

நிலக்கர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “குழந்தையை அழைத்துக் கொண்டு டாஸ்மாக் சென்று மது வாங்கி அருந்தினேன். பிறகு திரும்பும் வழியில் சிக்கன் பக்கோடா வாங்கிக் கொண்டு வந்து அருகில் உள்ள பாலத்தின் சுவரில் குழந்தையை அமர வைத்துவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது குழந்தை தனக்கும் சிக்கன் பக்கோடா வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தது. அதில் ஆத்திரமடைந்து கன்னத்தில் அடித்தபோது குழந்தை தவறி கீழே விழுந்துவிட்டது. சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டதால் பயத்தில் உடலைக் கொண்டு போய் முட்புதரில் வீசினேன்” எனக் கூறியுள்ளார்.

Tags : #4YEAROLDGIRL #BRUTALMURDER #SHOCKINGREASON #TIRUVALLUR