'பிரசாதத்தில்' சயனைடு.. 2 வருடத்தில் 10 கொலை.. 'மட்டன் சூப்' ஜூலியை.. மிஞ்சிய மனிதர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 06, 2019 01:03 AM

பிரசாதத்தில் சயனைடு கலந்து கொடுத்து கடந்த 2 வருடங்களில் 10 பேரை கொலைசெய்த சீரியல் கில்லரை ஆந்திர போலீசார் இன்று கைது செய்தனர்.

Man killed 10 people in 2 years with cyanide laced prasadam

வேலங்கி சிம்ஹாத்ரி என்னும் சிவன் கிருஷ்ணா என்பவர் கடந்த பிப்ரவரி 2018 முதல் இந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதிவரை சுமார் 10 கொலைகளை செய்துள்ளார். சமீபத்தில் நிகழ்ந்த ஒரு மரணம் தொடர்பாக விசாரணை நடத்தியதில்  சிவன் கிருஷ்ணா என்பவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் தன்னிடம் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக கூறி மக்களை அவர் ஏமாற்றி இருக்கிறார். அவர்களிடம் இருந்து பணம், நகைகளை பறித்தபின் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரசாதத்தில் சயனைடு கலந்து கொடுத்து அவர்களை கொலை செய்திருக்கிறார்.முதலில் இதுகுறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. எனினும் சில மரணங்களில் உறவினர்கள் சந்தேகம் எழுப்பியதால் அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்த, சிவன் கிருஷ்ணா குறித்த உண்மைகள் வெளியாகியுள்ளன.

மேலும் அவரின் மொபைலை போலீசார் ஆராய்ந்த போது அதில் இறந்தவர்களின் மொபைல் எண்கள் இருப்பது தெரியவந்தது.இதனால் புதைக்கப்பட்ட உடல்களை வெளியில் எடுத்து சோதனை தடயவியல் நிபுணர்களை கொண்டு சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.அவருக்கு சயனைடு வழங்கியதாகக் கூறி விஜயவாடாவில் நிக்கல் பூச்சு பட்டறை நடத்தி வரும் ஷேக் அமினுல்லாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #MURDER