'அம்மாவ கொடூரமா கொல்றப்போ...' '6 குழந்தைகளும் பார்த்துகிட்டு இருந்துருக்காங்க...' யோகா பண்ண வந்தப்போ தொடங்கிய பிரச்சனை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jun 15, 2020 10:34 AM

மத்திய பிரதேசம் போபால் பகுதியில் 6 பிள்ளைகளின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

a husband murdering wife in front of six children in Bhopal.

மத்திய பிரதேசம் போபால் பகுதியில் உள்ள கட்வாலியா கிராமத்தில் மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் 45 வயதான சூரஜ்.  சூரஜ் தன் மனைவியின் நடத்தையின் மேல் சந்தேகமுற்று அடிக்கடி சண்டை போட்டு தன் மனைவியை அடிக்கும் செயலிலும் ஈடுபடுவதுண்டு.

அதேபோல் சம்பவம் நடந்த வெள்ளிக்கிழமையன்றும், சூரஜ் மனைவியின் சகோதரர் யோகா செய்வதற்காக தன் சகோதரியின் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தன் மனைவியையும், அவரது சகோதரரையும் சேர்த்து தாக்கியுள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை சூரஜின் மனைவி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவர்களது 4-13 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் மற்றும் நான்கு மகன்களும் ஒரு நாள் இரவு முழுவதும் தன் தாயின் சடலத்தின் முன்பு அமர்ந்திருந்துள்ளனர்.

மறுநாள் சனிக்கிழமை காலை தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் கணவர் அவரது மனைவியின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்தார். மேலும் குழந்தைகள் இந்த கொலைக்கு சாட்சியம் அளித்தனர். இதன் காரணமாக சனிக்கிழமை இரவு சூரஜ் கைது செய்யப்பட்டார்" என்று பார்டே கூறினார்.

குழந்தைகளின் கண்முன்னே அப்பாவே அம்மாவை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. A husband murdering wife in front of six children in Bhopal. | India News.