'இது தற்கொலை இல்ல'... 'பகீர் தகவலை வெளியிட்ட சுஷாந்தின் மாமா'... 'அவர் சொன்ன காரணம்'... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 15, 2020 10:18 AM

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை கொண்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மாமா குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sushant Singh Rajput’s Maternal Uncle Claims he Was Murdered

முன்னணி பாலிவுட் நடிகரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான "M.S. Dhoni: The Untold Story" படத்தில் நடித்து பலரின் மனதில் இடம் பிடித்தவருமான,  சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 34 வயது இளம் நடிகர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டது சினிமா ரசிகர்களைத் தாண்டி பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது தாய்வழி மாமா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். பாட்னாவில் உள்ள சுஷாந்தின் வீட்டில், ஏஎன்ஐ செய்தியாளர்களிடம் பேசிய பேசிய அவர், ‘சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை'' என கூறியுள்ளார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதில் சதி இருக்கலாம் எனவும், சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தனது காரணத்தை அவர் முன் வைத்துள்ளார்.

இதனிடையே சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவும் கூறி உள்ளார். இந்த தகவல்  பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sushant Singh Rajput’s Maternal Uncle Claims he Was Murdered | India News.