‘பிரசவத்தின்போது நடிகைக்கு நேர்ந்த பயங்கரம்’.. ‘சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காத அவலம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 22, 2019 02:26 PM

பிரசவத்தின்போது ஆம்புலன்ஸ் தாமதமாக கிடைத்ததால் மராத்தி நடிகை பூஜா ஸுஞ்சார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

No ambulance Marathi actress Pooja Zunjar baby die after delivery

மராத்தி படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளவர் பிரபல நடிகை பூஜா ஸுஞ்சார் (25). நிறைமாத கர்ப்பிணியான இவர் தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி எடுக்க, உடனடியாக கோரேகானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே இறந்துள்ளது.

அடுத்து சில நிமிடங்களிலேயே பூஜாவின் உடல்நிலையும் மோசமாக, அங்கிருந்த மருத்துவர்கள் அவரை ஹிங்கோலி சிவில் ஹெல்த் செண்டருக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவசரத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட கிடைக்காத நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று கிடைத்துள்ளது.

பின்னர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைத்திருந்தால் பூஜா உயிர் பிழைத்திருப்பார் என அவருடைய உறவினர்கள் வேதனையோடு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MAHARASHTRA #HINGOLI #MARATHI #ACTRESS #POOJAZUNJAR #DELIVERY #BABY #AMBULANCE #DEAD