'சிறுக சிறுக சேத்தேன் சாமி'...'எலி மொத்தமா நாசம் பண்ணிடுச்சு'...கோவையில் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 22, 2019 10:36 AM

விவசாயி ஒருவர் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை எலி கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rats shred farmer Rs 50000 worth currency notes in Coimbatore

கோவை வெள்ளியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ். விவசாயம் செய்து வரும் இவருக்கு, சமீபத்தில் நடந்த அறுவடை மூலம் 50 ஆயிரம் பணம் கிடைத்துள்ளது. இந்த பணத்தை ஒரு பையில் போட்டு தனது வீட்டில் ரங்கராஜ் வைத்துள்ளார். சில நாட்கள் கழித்து பணத்தை எடுப்பதற்காக தனது பையை ரங்கராஜ் திறந்து பார்த்துள்ளார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பையில் ரங்கராஜ் வைத்திருந்த பணத்தை எலி ஒன்று கடித்துக்குதறி, சின்னாப்பின்னமாக்கியது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் பதறிய, ரங்கராஜ் வங்கி கிளையை அணுகியுள்ளார். ஆனால் ரூபாய் நோட்டுகள் தாறுமாறாகக் கிழிந்துள்ளதால் அதனை மாற்ற முடியாது என வங்கியில் கூறியுள்ளார்கள். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் இப்படி வீணாக போய்விட்டதே என விவசாயி ரங்கராஜ்  சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

Tags : #COIMBATORE #RATS #SHRED #FARMER #CURRENCY #RANGARAJ #VELLIANGADU