asuran US others

‘கணவரின் அண்ணனுடன் ஏற்பட்ட தகாத உறவு’.. ‘பிறந்த பச்சிளம் குழந்தைக்கு’.. ‘தாயால் நடந்த பரிதாபம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 30, 2019 09:37 AM

திருவண்ணாமலையில் பச்சிளம் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த தாயும், அவருடைய கணவரின் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Mother brutally killed her infant baby in Thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சேவையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குமார் - சோலையம்மாள் தம்பதி. இவர்களுக்கு கடந்த 14ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதைத்தொடர்ந்து 16ஆம் தேதி சோலையம்மாள் மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீஸார் சென்னையில் இருந்த சோலையம்மாளை கைது செய்துள்ளனர்.

பின்னர் போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், சோலையம்மாளுக்கும் அவருடைய கணவரின் சகோதரர் பாபுவுக்கும் தகாத உறவு இருந்தது தெரிய வந்துள்ளது. அதன்காரணமாகவே அந்தப் பெண் குழந்தை பிறந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவருக்கும் அவருடைய கணவருக்கும் ஏற்கெனவே உள்ள 4 குழந்தைகளில் ஒரு மகளுக்கு திருமணமும் ஆகியுள்ள நிலையில்,  தகாத உறவால் பிறந்ததால் அந்தக் குழந்தையைக் கொன்று விட்டதாக அவர் கூறியுள்ளார்.

சோலையம்மாள் பாபுவுடன் சேர்ந்து குழந்தையின் முகத்தை துணியால் பொத்தி கொலை செய்ததும், பின்னர் குழந்தையின் உடலை சேவூர் கிராமத்தில் உள்ள ஒரு விளை நிலத்தில் புதைத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சோலையம்மாள், பாபு இருவரையும் கைது செய்துள்ள போலீஸார், குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Tags : #THIRUVANNAMALAI #INFANT #BABY #MOTHER #HUSBAND #BROTHER #AFFAIR #BRUTAL #MURDER