darbar USA others

அம்மாவைப் போல்... இவளும் போய் விடுவாளோ என்ற பயம்... கணவர் எடுத்த விபரீத முடிவு... உறைந்து நின்ற மனைவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 14, 2020 04:38 PM

தாயை போல மனைவியும் தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாளோ என பயத்தில்  இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man Committed Suicide for fear of wife Breaking up Marriage

புதுச்சேரி குரும்பாபேட் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய பாஸ்கர் (34). இவர் முத்திரையர்பாளையம் சண்முகா தியேட்டர் அருகே போட்டோ பிரேம் கடை நடத்தி வந்துள்ளார்.  இவருக்கு கீதா (30) என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. மனைவி கீதா அரசு கால்நடை கல்லூரியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், விஜயபாஸ்கர் சிறுவனாக இருந்தபோது, அவரது தந்தை இறந்துள்ளார். இதனால், அவரது தாயார் வேறொருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் வருத்தமடைந்த விஜயபாஸ்கர், இதனை தனது  மனைவியிடம் அடிக்கடி கூறி வேதனைப்பட்டு வந்துள்ளார். மேலும் தனது அம்மாவைப் போல், மனைவியும் தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாளோ என விஜயபாஸ்கர் பயத்திலேயே இருந்து வந்துள்ளார். இதனால் தனது மனைவி கீதாவிடம் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியமும் விஜயபாஸ்கர் இதுபோல் கேட்டு மனைவியிடம் தகராறு செய்ததாகத் தெரிகிறது. இதனால் மனைவி கீதா கணவரிடம் கோபித்துக் கொண்டு, தனது குழந்தையுடன் பக்கத்து தெருவில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் குழந்தையைப் பார்க்கக் கூட கணவர் வராததால் சந்தேகம் அடைந்த கீதா, நேற்று வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் சிமெண்ட் ஷீட்டில் இரும்பு பைப்பில் கணவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு சடலாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறித் துடித்தார். பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDE #HUSBANDANDWIFE