asuran US others

‘மொட்டை மாடியில்’.. ‘கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்த கணவர்’.. ‘சந்தேக வளையத்தில் சிக்கியுள்ள மனைவி, சகோதரி’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 30, 2019 11:23 AM

காரைக்குடியில் வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பியவர் வீட்டின் மொட்டை மாடியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Karaikudi Wife Sister under investigation in Husbands murder case

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்தவர் மணிமுத்து. இவருக்கு பூமதி என்ற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். கத்தார் நாட்டில் வெல்டராக வேலை செய்துவந்த மணிமுத்து 15 நாட்களுக்கு முன்பாக ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவர் வீட்டின் மொட்டை மாடியில் கொடூரமாகக் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார்.

அதிகாலை 4 மணியளவில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும், மர்ம நபர்களால் மணிமுத்து தலையில் பலமாகத் தாக்கப்பட்டு வயிறு மற்றும் கழுத்து என பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதிகாலையில் மாடியில் அவர் தூங்கிக் கொண்டிருந்ததாக அவருடைய மனைவி பூமதி போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆனால் மாடியில் பாய், தலையணை, போர்வை என எதுவுமே இல்லாததால் சந்தேகமடைந்த போலீஸார் பூமதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மணிமுத்துவுக்கும், அவருடைய சகோதரிக்கும் சொத்து தகராறு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக மணிமுத்துவை நெருங்கிய சொந்தத்தில் யாராவதுதான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவு அல்லது சொத்து தகராறே இந்தக் கொலைக்கு காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : #KARAIKUDI #MAN #MURDER #HUSBAND #WIFE #AFFAIR #SISTER #PROPERTY #ISSUE #BRUTAL