asuran US others

‘சேர்ந்து வாழ மறுத்த மனைவி’ ‘ப்ளேடால் சரமாரியாக கிழித்த கணவன்’.. சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 29, 2019 04:34 PM

சேர்ந்து வாழ வர மறுத்த மனைவியை ப்ளேடால் சரமாரியாக கிழித்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Husband brutally attacks his wife with blade in Chennai

சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர்கள் விஸ்வநாதன்-மீனா தம்பதி. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீனாவின் வீட்டிற்கு சென்ற விஸ்வநாதன் தன்னுடன் சேர்ந்து வாழும்படி கூறியுள்ளார். இதனை மீனா மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது விஸ்வநாதன் தான் மறைத்து வைத்திருந்த ப்ளேடால் மீனாவை சரமாரியாக கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால் மீனாவின் முகம், தலை, கை என உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனாவுக்கு 60 -க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மனைவியை ப்ளேடால் தாக்கிவிட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : #CHENNAI #HUSBAND #WIFE #ATTACKED #INJURY