asuran US others

'தீபாவளிக்காக கொண்டு போன பட்டாசு'...'திடீர்னு வந்த புகை'...'இருவரின் தலை துண்டான பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 30, 2019 11:16 AM

தீபாவளிக்காக கொண்டு சென்ற பட்டாசுகள் வெடித்து சிதறியதில், இரண்டு பேர் தலை துண்டாகி இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crackers Van burst near Villupuram 2 people killed

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, பட்டாசு ஏற்றிய வேன் ஒன்று பாண்டிச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தது. திண்டிவனம் - செஞ்சி சாலையில், வடவானுர் பகுதியில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென புகை வந்தது. இதையடுத்து வேனை நிறுத்திய ஓட்டுநர், கீழே இறங்கி சென்று ஏன் புகை வருகிறது என பார்த்தார். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த கிராம மக்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்துள்ளார்கள். அப்போது பட்டாசுகள் வெடித்ததில் இரண்டு பேர் தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதையடுத்து அங்கு வந்த தீயணைக்கும் வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

இதனிடையே இறந்தவர்களின் உடல்கள் சிதைந்து இருப்பதால் அவர்கள் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #FIREACCIDENT #ACCIDENT #CRACKERS #VILLUPURAM #BURST