asuran US others

‘காதல் கணவன் செய்த காரியத்தால்’... 'இளம்பெண்ணுக்கு நடந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 27, 2019 11:57 AM

காதலித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அந்தப் புகாரிலிருந்து தப்பிக்க திருமணம் செய்துவிட்டு தலைமறைவானதாக, கணவன் மீது இளம் மனைவி புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

husband cheated his wife and escaped in pudukkottai

திருவண்ணாமலை போளூரைச் சேர்ந்த செலின் என்ற இளம்பெண், சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனத்தில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு வேலைப்பார்த்து வந்த புதுக்கோட்டை மஜூவாடியை சேர்ந்த அருண் என்ற இளைஞருடன், கடந்த 6 வருடங்களாக நண்பர்களாக பழகிவந்தநிலையில், திடீரென பெங்களூர் கிளைக்கு செலின் மாற்றப்பட்டுள்ளார். அதன்பின்னர் இவர்கள் நட்பு காதலாக மாறியுள்ளது. பின்னர் திருமணம் பற்றி பேசி வந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் பெங்களூர் சென்ற அருண், தான் தங்கியிருந்த விடுதிக்கு செலினை வரவழைத்துள்ளார்.

அங்கு சென்ற செலினை, அருண் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திருமணம் செய்வதாக கூறிய அருண், நாட்களை கடத்தவே, செலின் பெங்களூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் பயந்துபோன அருண், கடந்த ஆகஸ்ட் மாதம் செலினை உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு, அதனை முறைப்படி பதிவும் செய்துள்ளனர். பின்னர் பெங்களூருக்கு பணியில் சேருவதற்காக செலின் செல்ல, அவருடன் சென்ற அருண் அங்கு வேலையில்லாமல் இருந்துள்ளார். 

இந்நிலையில், இவர்கள் இருவரும் தனிமையில் இருந்த வீடியோ ஒன்றை நண்பணுக்கு, அருண் அனுப்பியதை அறிந்த செலின், இதுபற்றி கேட்க இருவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. இதனால் தனது ஊருக்கு திரும்பிய அருண், பின்னர் அங்கிருந்தும் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த செலின், கணவரின் வீட்டில் நியாயம் கிடைக்காததால், கணவரை சேர்த்து வைக்கக்கோரி மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHEATING #HUSBANDWIFE #BANGALORE #PUDUKKOTTAI