‘நடுராத்திரி 1 மணி’!.. துப்பாக்கி முனையில் துணிகரம்.. ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானிக்கு நடந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 04, 2020 11:01 AM

டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து கத்தியால் குத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SpiceJet pilot robbed at gunpoint, Near IIT campus at midnight

டெல்லியை சேர்ந்த யுவராஜ் திவாடியா ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில், விமான கேப்டனாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்றி நள்ளிரவு 1 மணியளவில் வேலை முடிந்து அலுவலக காரில் பரிதாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு சென்றுகொண்டு இருந்துள்ளார்.

தெற்கு டெல்லியில் உள்ள ஐஐடி வளாகம் அருகே கார் வந்துகொண்டிருந்தபோது சுமார் 10 பேர் கொண்ட கும்பல் திடீரென காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். காரை சுற்றி வளைத்த அந்த கும்பல் காரின் கண்ணாடிகளை உடைத்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துள்ளது. கொள்ளையர்கள் தப்பி ஓடுவதற்கு முன்பாக விமானியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியுள்ளது.

இதில் படுகாயமடைந்த விமானி, கொள்ளை கும்பல் சென்றதும் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விமானியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கும்பல் தெற்கு டெல்லியின் மற்ற பகுதிகளிலும் இதேபோல் கார்களை மறித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரவு பணிக்கு சென்ற விமானியிடன் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. SpiceJet pilot robbed at gunpoint, Near IIT campus at midnight | India News.