'பீரோக்குள்ள ஒளிஞ்சு இருக்கும் கணவர்...' ' 17 வருசமா வேலைக்கு போகாம இதே வேலையா இருந்துருக்கார்...' - எதுக்கு இப்படி...:? மனைவியின் குமுறல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jul 14, 2020 11:11 AM

மனைவி மீது சந்தேகித்து வீட்டு அலமாரியில் ஒளிந்து வேவு பார்க்கும் கணவரை கண்டுபிடித்ததால் அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banglore husband inside the bero for Suspicion on the wife

பெங்களூரின் மகாதேவபூர் பகுதியில் வசிக்கும் 45 வயதான பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தன் மனைவியுடன் 17 ஆண்டுகளாக சந்தேகத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கையின்படி, கணவன் மற்றும் பாதிக்கப்பட்ட அவரது மனைவி கடந்த 2002 ஆம் ஆண்டு நண்பர்களாக பழகி பின் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

ஒரு வருட காலம் சந்தோஷமாக சென்ற அவர்களின் கல்யாண வாழ்க்கை அதன்பின் ஒரு சிறை போல் மாறியது என்றே சொல்லலாம். பாதுகாப்பு துறையில் பணிபுரியும் அவர், தனது மனைவியின் மீது சந்தேகம் அடைந்து பல கொடுமைகளை செய்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பணிக்கு செல்லாமல் 38 வயதான மனைவியை வீட்டின் அலமாரியில் ஒளிந்து கொண்டு வேவு பார்ப்பதையே ஒரு தொழிலாக கொண்டுள்ளார்.

கடந்த 17 ஆண்டுகளாக தனது கணவர் தன்னை உளவு பார்க்க அடிக்கடி அலுவலகத்தைத் தவிர்த்து வருவதை அறிந்த மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது கணவர் ஒரு  மன நோயாளி எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு சித்தப்பிரமைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது, அவர் தனது குடும்பத்தினரிடம் அன்பானவராக இருந்தார் எனவும், ஆனால் பின்னர் திடீரென்று சிகிச்சையை நிறுத்திய பிறகு இவ்வாறான செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மனைவியை பல ஆண்களுடன் உறவு வைத்திருப்பதாக அவருக்கு சந்தேக எண்ணம் தோன்றியுள்ளது. அதன் காரணமாக அந்த நபர் செய்தித்தாள் விநியோக மனிதர் மற்றும் பால் போடுபவர் ஆகியோருடன் சண்டையிட்டதாகவும், பல முறை தனது மனைவியை மிகக் கொடூரமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் தனது சர்ச் குழு உறுப்பினர்களிடம் தனது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர், எனவே அவரிடமிருந்து வரும் எந்தவொரு அழைப்பையும் அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளார். தற்போது அவரின் நிலை மோசமடைந்து தன்னை கொலை செய்ய சதி செய்ததாக அவரது மனைவி கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Banglore husband inside the bero for Suspicion on the wife | India News.