'மனைவியோட கை கால்களை கட்டிப் போட்டு...' 'அடிச்சே கொன்ற கணவன்...' 'அதோட நிறுத்தல...' நடுங்க செய்யும் கொடூரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jul 11, 2020 04:56 PM

கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்து, கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kanchipuram husband killed his wife during hands and legs tied

காஞ்சிபுரம் மாவட்டம் எண்ணைக்காரன் தெருவில் வசித்து வருபவர் 45 வயதான தேவிபிரசாத். கார் ஓட்டுநராக பணிபுரியும் தேவிபிரசாத் பொது முடக்கம் காரணமாக வீட்டிலே இருந்துள்ளார். பிரசாத்தின் மனைவி சரஸ்வதி (37) வீட்டு வேலை செய்து வந்த நிலையில் இருவரும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி ஏற்படும் குடும்ப தகராரால் ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிதல் இன்றி வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த தேவி பிரசாத் நேற்று இரவு (10.07.2020 வெள்ளிக்கிழமை) தனது மனைவி சரஸ்வதியின் கை கால்களை கட்டிப் போட்டு, வீட்டில் இருந்த சுத்தியலால் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தேவி பிரசாத்தும் வீட்டின் மேற்க்கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுர டி.எஸ்.பி மணிமேகலை இருவரது உடல்களையும் நேரில் பார்வையிட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக தொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kanchipuram husband killed his wife during hands and legs tied | Tamil Nadu News.