‘நேருக்கு நேர் மோதிய லாரி - ஜீப்’!..‘கோயிலுக்கு போன புதுமணத் தம்பதி உட்பட ’உடல் நசுங்கி 11 பேர் பலி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 14, 2020 03:26 PM

ராஜஸ்தானில் லாரியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து உண்டான சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.

11 dead in accident rajasthan ராஜஸ்தான் விபத்தில் 11 பேர் பலி

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கார் உள்ள பாலோத்ரா- பாலோதி நெடுஞ்சாலையில், சென்றுகொண்டிருந்த லாரியும் எதிரே வந்த ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் லாரிக்கு அடியில் நசுங்கிய ஜீப்பில் பயணித்த 6 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இவர்களுள் கடந்த மாதம் 27-ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியரும் அடக்கம்.

இந்த தம்பதியர் ராம்தியோரா கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த கோர விபத்துக்கு பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #ACCIDENT