darbar USA others

நொடிகளில் ‘100 அடி’ பள்ளத்திற்குள் ‘கவிழ்ந்த’ பேருந்து... பயங்கர விபத்தில் சிக்கி ‘12 பேர்’ பலி... ‘40க்கும்’ மேற்பட்டோர் ‘படுகாயம்’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jan 07, 2020 12:48 PM

இலங்கையில் அரசுப் பேருந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Sri Lanka 12 Dead 40 Injured In Badulla Bus Accident

இலங்கையின் ஊவா மாகாணத்திலுள்ள பசறை எனும் பகுதியில் இருந்து எக்கிராவ எனும் பகுதிக்கு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. மதுல்சிமா நகரை ஒட்டியுள்ள மலைப் பகுதியில் போய்க்கொண்டிருக்கும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 100 அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்புப்படையினர் பேருந்திற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் இதுவரை 2 பள்ளி மாணவிகள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Tags : #ACCIDENT #SRILANKA #BUS