'மசாஜ்' செண்டர் பெயரில் பாலியல் தொழிலா?... புகாரின் அடிப்படையில் கரூர் 'போலீசார்' தீவிர விசாரணை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மசாஜ் செண்டர் பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, கரூர் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
![Police investigate 4 people in Karur, details here Police investigate 4 people in Karur, details here](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/police-investigate-4-people-in-karur-details-here.jpg)
கரூரில் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து இன்று பிற்பகல் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கிருந்த 3 பெண்கள் உள்ளிட்ட நால்வரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அந்த மசாஜ் செண்டருக்கு போலீசார் பூட்டு போட்டு மூடியது குறிப்பிடத்தக்கது.
Tags : #POLICE
![](https://www.behindwoods.com/images/spacer.gif)