"இத்தனை வருஷம் கூட இருந்து பாசமா பாத்துக்கிட்டா".. மறைந்த மனைவி.. "இரண்டு குழி தோண்டுங்க".. சோகத்தில் முடிவு எடுத்த முதியவர்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 12, 2023 02:38 PM

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறியை அடுத்த மாடத்தட்டுவிளை அருகேயுள்ள குதிரைபந்திவிளை என்னும் பகுதியை சேர்ந்தவர் செல்வ ஜார்ஜ் (வயது 77). இவர் சித்த வைத்தியராக இருந்துள்ளார். இவர் ஊர் ஊராக சென்று சித்த வைத்தியம் செய்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. இவரது மனைவி பெயர் மரிய தங்கம் (72).

Kanyakumari old man decision after his wife passed away

Also Read | கிரவுண்ட்ல பாண்டியாவை முறைத்த விராட் கோலி.. டக்குன்னு பாண்டியா செஞ்ச காரியம்..!

இதனிடையே, கடந்த சில தினங்கள் முன்பாக திடீரென மரிய தங்கத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது. இதன் காரணமாக, உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்தும் போயுள்ளார்.

மரிய தங்கம் இழப்பு, கணவர் செல்வ ஜார்ஜ் மற்றும் குடும்பத்தினரை கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.

அதிலும் கடந்த 50 ஆண்டுகளாக தன்னுடன் இணைந்து வாழ்ந்து வந்த மனைவி மரிய தங்கத்தின் இழப்பை கொஞ்சம் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் செல்வ ஜார்ஜ் அவதிப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது. இனி மேல் தனது வாழ்க்கையில் மனைவி இல்லை என்பதை அவரால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றும் தெரிகிறது.

இதனிடையே, மரிய தங்கத்தின் இறுதிச் சடங்கு நடைபெற்று கொண்டிருந்த போது, தனது குடும்பத்தினரிடம் இன்னொரு குழியையும் தோண்டி தயாராக வைத்திருங்கள் என செல்வ ஜார்ஜ் கூறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆரம்பத்தில் அவரது குடும்பத்தினர் மன வேதனை காரணமாக அப்படி கூறுவதாக கருதி உள்ளனர்.

Kanyakumari old man decision after his wife passed away

ஆனால், சில நேரம் கழித்து தான் செல்வ ஜார்ஜ் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடிவு செய்தது தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே, திடீரென மயங்கி விழுந்த செல்வ ஜார்ஜை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் செல்வ ஜார்ஜ் உயிரிழந்துள்ளார். இத்தனை ஆண்டுகள் ஒன்றாக இருந்த மனைவி, திடீரென உயிரிழந்ததால் கடும் வேதனையில் இருந்த கணவரும் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட விஷயம், பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.

Also Read | 2011 உலக கோப்பை ரகசியம்.. "தோனி என்கிட்ட சொன்ன வார்த்தை".. கம்பீர் Open டாக்.. "சும்மாவா கூல் கேப்டன்னு சொன்னாங்க"

Tags : #KANYAKUMARI #OLD MAN #WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kanyakumari old man decision after his wife passed away | Tamil Nadu News.