‘ஃபேஸ்புக்கில்’ அறிமுகம்... ‘காதல்’ திருமணம் செய்து ‘ஐந்தே’ மாதங்களில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 07, 2020 08:09 PM

சென்னை ராமாபுரத்தில் திருமணமான 5 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Woman Commits Suicide After 5 Months Of Love Marriage

சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி அருண் - காஞ்சனா. இலங்கையைச் சேர்ந்த காஞ்சனாவிற்கு ஃபேஸ்புக் மூலமாகவே அருண் நண்பராக அறிமுகமாகியுள்ளார். அதன்பிறகு இருவரும் காதலிக்கத்தொடங்கி, கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதையடுத்து கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை காஞ்சனா வீட்டின் படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காஞ்சனாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து காஞ்சனாவின் கணவர் அருணிடம் போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், திருமணமாகி 5 மாதங்களில் அவர் தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #CRIME #SUICIDEATTEMPT #FACEBOOK #CHENNAI #WOMAN #LOVE #MARRIAGE