'காதலுக்கு' உதவிய 'தங்கை'... 'அண்ணனால்' நேர்ந்த கொடூரம்... 'மருத்துவர்கள்' கூறியதைக் கேட்டு... அதிர்ந்து போன 'பெற்றோர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 29, 2020 11:09 PM

தாராபுரம் அருகே காதலுக்கு தூது சென்ற தங்கையை, அண்ணனே கர்ப்பமாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

16 year old girl who pregnant by her brother in tirupur

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (26). கூலி தொழிலாளியான இவர், அதேப் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு சந்திரசேகரனின் பெரியப்பா மகளான தங்கை பிரியாவை(16) தூதுவாக பயன்படுத்தி வந்துள்ளனர். சந்திரசேகரன் தனது காதலியை அடிக்கடி தனது பெரியப்பா வீடான பிரியா வீட்டில் சந்தித்து பேசி வந்துள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த தனது தங்கை பிரியாவை மிரட்டி அடிக்கடி பாலியல்  வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இதையடுத்து அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதைக் கேட்டு பெற்றோர் அதிர்ந்து போயினர். சிறுமியிடம் பெற்றோர் இதுகுறித்து விசாரித்தபோது, கடந்த ஓராண்டாக சந்திரசேகரன், தங்கை என்றும் பார்க்காமல் மிரட்டியே பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்திரசேகரனை கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : #SEXUALABUSE #BROTHER #SISTER