‘கிரிக்கெட்டில் 80 ஆண்டுகளுக்குப் பின்’.. ‘மோசமான சாதனையைப் பதிவு செய்த இந்திய வீரர்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Oct 08, 2019 05:41 PM
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா 80 ஆண்டுகளுக்குப் பின் மோசமான சாதனை ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதமடித்த ரோஹித் ஷர்மா பல சாதனைகளை முறியடித்தார். அத்துடன் இந்தப் போட்டியில் அவர் மோசமான சாதனை ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் ரோஹித் ஷர்மாவை தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் கேஷவ் மகராஜ் பந்துவீச்சில் டிகாக் ஸ்டெம்பிங் செய்துள்ளார். இப்படி 2 இன்னிங்ஸிலும் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரர் இவர்தான். கடைசியாக 1939ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வாலி ஹம்மண்ட் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இதேபோல 2 முறை ஆட்டமிழந்துள்ளார்.
