legend updated

'தெரியும்யா இங்கதான் இருப்பனு'.. கள்ளக்காதலியின் வீட்டுக்கே சென்று 'புரட்டி எடுத்த' மனைவி.. 'என்னா அடி'.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 25, 2019 06:00 PM

கள்ளக்காதலியின் வீட்டுக்குச் சென்ற மனைவி , தன் கணவரையும், கணவரின் கள்ளக் காதலியையும் கையும் களவுமாக போலீஸிடம்  பிடித்துக் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

wife went husbands affairs home, here is what she did

ஹைதராபாத்தின் கொட்ட கொம்மு கூடம் பகுதியில் திருமணமாகி 2 ஆண்டுகள் வசித்து வந்தனர் லஷ்மன் மற்றும் சுஜன்யா தம்பதியர். ஒரு கட்டத்தில் கூக்கட்பள்ளியில் உள்ள அனுஷா என்கிற பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி லஷ்மன் சென்று வந்துள்ளார். இதை அறிந்த சுஜன்யாவுக்கு லஷ்மனுக்கும் இடையே தகராறு எழுந்தது.

இதனையடுத்து அனுஷா வீட்டுக்குச் சென்ற லஷ்மன், தன் வீடு திரும்பவே இல்லை. இதனால் மன வேதனை அடைந்த சுஜன்யா, லஷ்மனைவிட்டு பிரிந்து சென்று, லஷ்மனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கும் லஷ்மன் பதில் அளிக்காமல் மௌனம் சாதித்தாகத் தெரிகிறது. அவ்வளவுதான், தனது உறவினர்களுடன் தன் கணவர் லஷ்மன் வசித்து வரும், அவரது கள்ளக் காதலியான அனுஷாவின் வீட்டுக்குச்சென்ற சுஜ்ன்யா, அங்கிருந்த கணவருக்கு 2 தர்ம அடிகளைப் போட்டு, கணவரையும் அவரது கள்ளக் காதலியையும் கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

கள்ளக்காதல் கிரிமினல் குற்றம் இல்லை என்று சில மாதங்களுக்கு முன் உத்தரவு வந்தாலும், முதல் மனைவி இருக்கும்போது இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த லஷ்மனின் வழக்கு முதல் மனைவியின் ஆட்சேபனை என்கிற அடிப்படையிலும், சுஜன்யா அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ்க்கு பதில் சொல்லாததால், ஷோ காஸ் என்கிற அடிப்படையிலும் லஷ்மன் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

சுஜன்யாவின் இந்த துணிகரச் செயல் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Tags : #HYDERABAD #AFFAIR #HUSBANDANDWIFE