‘எரிமலை எப்படி பொறுக்கும்!’.. எஜமானரைத் தாக்க வருபவர்களை நோக்கி ‘பசு மாடு’ செய்யும் ‘விநோத’ காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 21, 2020 06:10 PM

பசுமாடு ஒன்று தன்னை வளர்த்தவர் தாக்கப்படுவதைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழுந்து அவரை சென்று காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தன் எஜமானருக்காக சண்டை போடும் பசுCow fights to save its owner

இம்ரான் சுனா என்கிற நபர் தன் பண்ணையில் பசுக்களை வளர்த்து வருகிறா. அதில் ஒரு பசு யாராவது அவரை கம்பால் தாக்குவது போன்று சந்தேகம் வந்தாலே போதும், உடனடியாக ஓடி வந்து அவர்களை துரத்தி, விரட்டியடித்து தன் எஜமானரை காப்பாற்ற முனைகிறது. 

இதேபோல் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், இம்ரான் சுனா அந்தப் பசுவை பெயர் சொல்லி அழைக்கும் போது அந்தப் பசுவோ, உடனே துள்ளிக் குதித்து ஓடி வந்துவிடுகிறதாம். ஆக தன்னை வளர்க்கும் இம்ரான் சுனா மீது இந்த பசு வைத்திருக்கும் பாசத்தை காட்டும் வகையில் இணையத்தில் உலா வரும் இந்த வீடியோவை பாராட்டையும் பகிர்ந்து வருகின்றனர்.

Tags : #COW #VIRAL