‘40 வருஷ காத்திருப்பு’.. நொடியில் மாறிய வாழ்க்கை.. முதியவருக்கு அடிச்ச ‘ஜாக்பாட்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jun 02, 2020 01:34 PM

ஆஸ்திரேலியாவில் முதியவர் ஒருவருக்கு லாட்டரியில் 1 கோடியே 54 லட்சம் விழுந்துள்ளது.

Old man won 300,000 dollars after 40 years in Gold Lotto lottery

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வரும் முதியவர் ஒருவர் கோல்ட் லோட்டோ என்னும் லாட்டரியை கடந்த மே மாதம் 30ம் தேதி வாங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று அதற்கான லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. அப்போது முதியவர் வாங்கிய எண்ணுக்கு 300,000 ஆஸ்திரேலிய டாலர் பரிசாக விழுந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 54 லட்சம்.

இதுகுறித்து தெரிவித்த முதியவர்,‘இந்த தருணத்துக்காக பல வருஷமாக காத்திருந்தேன். இந்த வரிசை லாட்டரி நம்பரைதான் கடந்த 40 ஆண்டுகளாக வாங்கி வருகிறேன். இது ஆச்சரியமாகதான் இருக்கிறது. நிலவுக்கு மேலே இருக்கிற மாதிரி உள்ளது. இந்த பணத்தில் எங்கள் கனவு வீட்டை வாங்குவோம் என நினைக்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Old man won 300,000 dollars after 40 years in Gold Lotto lottery | World News.