திருப்பூரில் பரபரப்பு: அலைபாயுதே பாணியில் 'திருமணம்'... காதல் கணவர் 'ஏற்க' மறுத்ததால்... விபரீத முடிவெடுத்த இளம்பெண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jun 16, 2020 03:49 PM

அலைபாயுதே பட பாணியில் திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணை காதல் கணவர் ஏற்க மறுத்ததால் அவர் விபரீத முடிவெடுத்தார்.

Woman Attempt Suicide in Collector Office, Police Investigate

சினிமாவை வெறும் பொழுதுபோக்காக பார்க்காமல் அதைப்பார்த்து கொலை, கொள்ளை செயல்களில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதேபோல சினிமா பாணியில் காதல் செய்வதும், கல்யாணம் செய்வதும் கூட அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருவதுண்டு.

அந்த வகையில் அலைபாயுதே பட பாணியில் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் காதல் கணவர் ஏற்க மறுத்ததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வி(23). இவரும், அதே பகுதியை சேர்ந்த தீபக்கும் (26) காதலித்து வந்ததாக தெரிகிறது.

அலைபாயுதே சினிமா பாணியில் திருமணம் செய்து கொண்டு இருவரும் அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களாக தீபக், முத்துச்செல்வியுடன் பேசுவதை தவிர்த்து அவரை ஏற்கவும் மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துச்செல்வி உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று இருவருக்கும் கவுன்சலிங் நடைபெற்றது. அப்போது தீபக் சேர்ந்து வாழ முடியாது என தெரிவித்து இருக்கிறார். இதைக்கேட்ட முத்துச்செல்வி அங்கிருந்து கழிவறைக்கு சென்று விஷமருந்தி விட்டார். இதையறிந்த அவரது பெற்றோர்கள் கதறித்துடித்தனர். தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தங்களுடைய மகளை ஏமாற்றி விட்டதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் தெரிவித்த பிறகே அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman Attempt Suicide in Collector Office, Police Investigate | Tamil Nadu News.