ரகசியமாக நடந்த 'திருமண' ஏற்பாடுகள்... கடைசி நேரத்தில் வராமல் போன 'காதலன்'... அடுத்தடுத்த மரணங்களால் 'அதிர்ந்து' போன ஈரோடு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jun 15, 2020 02:26 PM

காதலன் இறந்த துக்கம் தாங்காமல் அவரது காதலியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Woman Suicide Near Erode District, Police investigate

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் பகுதியை சேர்ந்தவர் கேசவன்(28). இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். அதே மருத்துவமனையின் ஈரோடு கிளையில் கிருத்திகா(25) என்பவர் உதவியாளராக பணியாற்றி வந்தார். கேசவனும், கிருத்திகாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இதற்கிடையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேசவனிடம், கிருத்திகா கூறியிருக்கிறார். பதிலுக்கு கேசவன் எனது வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் நாம் திருமணம் செய்து கொண்டு பின்னர் வீட்டில் தெரிவிக்கலாம் என கூறியிருக்கிறார். தொடர்ந்து கடந்த 3-ம் தேதி கிருத்திகாவின் பெற்றோர் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று இருக்கின்றன.

ஆனால் கேசவன் வரவில்லை. இதையடுத்து கிருத்திகா மனமுடைந்து போனார். இதற்கிடையில் நேற்று முன்தினம் கேசவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த கிருத்திகா மிகவும் மனவருத்தம் அடைந்தார். அவருடைய பெற்றோர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ஆனாலும் மனம் மாறாத கிருத்திகா அவரது பெற்றோர் வெளியில் சென்ற நேரம் பார்த்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : #POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman Suicide Near Erode District, Police investigate | Tamil Nadu News.