ஆங்காங்கே தூவப்பட்ட 'மிளகாப்பொடி'... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட உடல்... 'தேனி'யை அதிரவைத்த கொலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jun 15, 2020 08:36 PM

அடையாளம் தெரியாமல் எரிந்து கிடந்த பிணத்தின் அருகே சுற்றிலும் மிளகாய்ப்பொடி தூவப்பட்டு இருந்தது.

Unknown Person\'s body was burned down near Theni, Details

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் இடையன்குளம் உள்ளது. நேற்று காலை இதன் வழியாக விவசாயிகள் சிலர் தங்களின் தோட்டங்களுக்கு சென்றனர். அப்போது அங்கே எரிக்கப்பட்ட நிலையில் பிணமொன்று கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தது 25 முதல் 27 வயது மதிக்கத்தக்க ஆண் என்று தெரியவந்தது. மேலும் எரிந்து கிடந்த பிணத்தின் தலையில் வெட்டுக்காயம் இருந்தது. அதோடு கழுத்தில் இறுக்கி கட்டப்பட்டு பாதி எரிந்த நிலையில் ஒரு துண்டு இருந்தது.

இதுதவிர பிணத்தின் அருகே ஆங்காங்கே மிளகாய்ப்பொடி தூவப்பட்டு இருந்தது. இதனால் அந்த வாலிபரை மர்ம நபர்கள் கொலை செய்து அவரது பிணத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து இருக்கலாம் என கருதப்படுகிறது. மிளகாய்ப்பொடி தூவியதால் மோப்ப நாய் வரவழைக்கப்படும் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதையடுத்து பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Unknown Person's body was burned down near Theni, Details | Tamil Nadu News.