darbar USA others

'சரக்கு' வாங்க வந்த இடத்துல சண்டை .. கத்தி மற்றும் கற்களால் 'சம்பவம்'' செய்த மர்ம நபர்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 14, 2020 11:56 AM

முன்விரோதம் காரணமாக வேலூரில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

wine to buy the place and the stone knife fight

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன்(22). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டைக்கு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ஐயப்பனை அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்தச் சண்டையில் அவரைக் கீழே தள்ளிய மர்மநபர்கள், கத்தி மற்றும் கல்லைக் கொண்டு தாக்கியதாக தெரிகிறது. இதில் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த 2 பேரும் தப்பியோடியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு போலீசார் சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் இந்தக் கொலை சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தப்பியோடியவர்களை தேடியும் வருகின்றனர்.

இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் சைதாப்பேட்டை பகுதியில் இரவில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாகவும் அப்போது மது வாங்க வந்த இடத்தில் கடந்த 12 ஆம் தேதி இரவு ஐயப்பனுக்கும் அங்கு இருந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : #VELLORE #WINE