asuran US others

‘ரயில் எஞ்சின் அடியில் சிக்கிய பெண்’.. ‘நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 28, 2019 07:50 PM

ஆம்பூர் அருகே ரயில் எஞ்சின் அடியில் சிக்கிய பெண் ஒருவர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்

Video Woman who got stuck under train engine rescued in Ambur

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சான்றோர் குப்பம் பகுதியில் நேற்று வயதான பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். திடீரென எதிரே ரயில் வர என்ன செய்வதெனத் தெரியாத அவர் அப்படியே தண்டவாளத்தில் படுத்துள்ளார். இதைப் பார்த்த ரயில் எஞ்சின் டிரைவரும் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார்.

ஆனால் அப்போதும் அந்தப் பெண் ரயில் எஞ்சின் அடியில் சிக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சில மணி நேரம் போராடி அந்தப் பெண்ணை மீட்டுள்ளனர். மேலும் அவர் யார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags : #CHENNAI #VELLORE #AMBUR #TRAIN #OLDWOMAN #ENGINE #SAVED #VIDEO