‘திருமணமான ஐந்தே நாளில் நடந்த சோகம்’.. ‘அதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பத்தினர்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 07, 2019 01:57 PM

தேனியில் திருமணமான 5 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Theni Kambam Five days After Marriage Girl Commits Suicide

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த சேதுபதி (22) என்பவருக்கும், அவருடைய உறவுக்காரப் பெண்ணான சிவசக்தி (18) என்பவருக்கும் கடந்த நவம்பர் 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சேதுபதி வெளியே சென்றிருந்தபோது சிவசக்தி மட்டும் மாடி அறையில் தனியாக இருந்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் அவர் கீழே வராததால் சந்தேகமடைந்த சேதுபதியின் தாய் புஷ்பவள்ளி மேலே சென்று பார்த்தபோது சிவசக்தி தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்துபோன புஷ்பவள்ளியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் சிவசக்தியை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் இருவீட்டாரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. 

Tags : #THENI #KAMBAM #WOMAN #GIRL #SUICIDE #MARRIAGE #NEWLYWED #BRIDE