இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்1. கொரோனா பாதிப்பு எதிரொலியாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடனை திரும்ப செலுத்த அவகாசம் வழங்க மத்திய அரசு பரிசீலனை.

2. கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் நாளை மறுநாள் சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
3. கொரோனா எதிரொலி: மார்ச் 22ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து - மெட்ரோ நிர்வாகம்
4. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 223ஆக உயர்வு - சுகாதாரத்துறை அமைச்சகம்.
5. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழப்பு. 4 தொழிலாளர்கள் படுகாயம்.
6. கொரோனா பரவ வாய்ப்பு: தமிழக - கேரள எல்லையை மூட உத்தரவு.
7. தமிழகத்தில் நாளை மறுநாள் தனியார் பால் விநியோகம் நிறுத்தம்.
8. மேற்கு வங்கத்தில் ரேஷன் கடைகளில் 6 மாதங்களுக்கு அரிசி இலவசம் - மம்தா அறிவிப்பு.
9. கொரோனா எதிரொலி - முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை.
10. மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ராஜினாமா - நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே விலகல்.
