புருஷன் ஊருக்கு போய்ட்டாரு.. ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த மனைவி.. கொஞ்ச நாள்ல நடந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Dec 27, 2022 12:56 PM

சென்னையில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை கண்டித்ததாக சொல்லப்படும் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Man Arrested in Chennai for slayed his Girlfriend Husband

Also Read | சச்சினுக்கே Tough கொடுக்கும் அஸ்வின்.. அடுத்த சாதனைக்கு அஸ்திவாரம்.. பெரும் எதிர்பார்ப்பில் கிரிக்கெட் உலகம்..!

திருநெல்வேலி மாவட்டம் மலையடி குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் என்ற வேல்துரை. 33 வயதான சங்கர் தனது மனைவி கோமதியுடன் சென்னை, கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்திருக்கிறார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சங்கர் அவ்வப்போது வெளியூருக்கு வேலை நிமித்தமாக பயணம் செய்வது வழக்கம். இதனிடையே சங்கரின் மனைவி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபுத்திரன் என்பவர் உடன் பழகி வந்திருக்கிறார்.

இருவருக்கும் இடையில் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. சங்கர் வெளியூர் செல்லும் வேளையில் வீரபுத்திரனை வரவழைத்து அந்த பெண்மணி தனிமையில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இவர்களது பழக்கம் குறித்து சங்கருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த சங்கர் தனது மனைவியை கண்டித்து இருக்கிறார். இதனை அடுத்து வீரபுத்திரன் உடனான தனது உறவை அந்தப் பெண்மணி துண்டித்துக் கொண்டார். ஆனாலும் வீரபுத்திரன் தொடர்ந்து அவரிடம் பேச முயற்சி செய்து வந்ததாக தெரிகிறது.

Man Arrested in Chennai for slayed his Girlfriend Husband

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தனது சொந்த ஊரிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்த வீரபுத்திரன் ஷங்கரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது சங்கர் மற்றும் வீரபுத்திரனுக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதம் கைகலப்பு வரையில் சென்று இருக்கிறது. அப்போது வீரபத்திரன் சங்கரை கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்து இருக்கிறார். இதனிடையே, அங்கு பணிபுரிந்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வீரபுத்திரனை மடக்கிப் பிடித்து போலீசாருக்கு இதுகுறித்து தகவலையும் அளித்திருக்கின்றனர்.

Man Arrested in Chennai for slayed his Girlfriend Husband

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிண்டி போலீசார் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வீரபுத்திரனை கைது செய்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவரை மனைவியின் ஆண் நண்பர் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | திருடிய பணத்தில் புது பைக்.. வாட்சப் ஸ்டேட்டசால் வசமாக சிக்கிய கும்பல்.. சினிமாவை மிஞ்சிய ஸ்கெட்ச்..!

Tags : #CHENNAI #HUSBAND #GIRLFRIEND #ARREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man Arrested in Chennai for slayed his Girlfriend Husband | Tamil Nadu News.