'சென்னை'யில் பேருந்து சேவை... 'இந்த' தேதியில் இருந்து தொடங்குகிறதா?... 'பயணிகளுக்கு' பயங்கர கட்டுப்பாடுகள் விதித்த போக்குவரத்துக்கழகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 21, 2020 12:20 PM

தமிழகத்தில் மே மாதம் 3-ம் தேதியுடன் லாக்டவுன் முடிவுக்கு வரும்? என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் மே 4-ம் தேதி முதல் சென்னையில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Lockdown: Chennai Bus Services is resume on May 4th?

இந்த நிலையில் மே 4-ம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும். மணிக்கு ஒருமுறை சோப் போட்டு கைகளை கழுவ வேண்டும். முகக்கவசம் இல்லாமல் ஏறும் பயணிகளை பேருந்து உள்ளே அனுமதிக்கக்கூடாது,'' என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை 303 பேர் கொரோனாவால் இங்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.