darbar USA others

‘திடீரென வெடித்து சிதறிய மர்மபொருள்’.. குப்பைத் தொட்டியில் பேப்பர் சேகரித்தவருக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 13, 2020 11:54 AM

குப்பைத் தொட்டியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hand bomb burst from trash box in Puducherry, One person injured

புதுச்சேரி முத்தியால்பேட்டை காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில், குப்பை சேகரிக்கும் தொழிலாளி செல்வராஜ் என்பவர் நேற்று வழக்கம்போல பேப்பர் சேகரித்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது குப்பைத் தொட்டியில் திடீரென மர்மப்பொருள் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. இதில் செல்வராஜின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குப்பைத் தொட்டியை ஆய்வு செய்துள்ளனர். அப்போது வெடித்தது நாட்டு வெடிகுண்டு என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரைவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் இதே பகுதியில் ரவுடிகளால் வெடிகுண்டு வீசி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அதே பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #PUDUCHERRY #BOMB #INJURED