‘டிக்கெட் எடுங்கள் என்று கூறிய’... ‘நடத்துநருக்கும், காவலருக்கும்’... 'வாக்குவாதத்தில் நேர்ந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 02, 2019 03:14 PM

டிக்கெட் எடுப்பதில் அரசுப் பேருந்து நடத்துநருக்கும், காவலர் ஒருவருக்கும் இடையே நடைபெற்ற கடும் வாக்குவாதத்தில், பேருந்திலேயே நடத்துநர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

government bus conductor died while argument with police

திருச்சியிலிருந்து கடலூர் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று விருத்தாசலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திட்டக்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பழனிவேல் என்பவர், சீருடை அணியாமல் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம், நடத்துனரான கோபிநாத், பயணச்சீட்டு வாங்குமாறு கோரியுள்ளார். அதற்கு பதிலளித்த காவலர் பழனிவேல், தான் போலீஸ் என தெரிவித்துள்ளார்.

இதற்கு  போலீஸ் என்றால் அதற்கான உரிய அடையாள அட்டையை காட்டுங்கள் என நடத்துனர் கோபிநாத் கேட்டுள்ளார். ஆனால் காவலர் பழனிவேலோ அதற்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பயணிகளும் காவலருக்கு எதிராக குரல் கொடுத்ததாகத் தெரிகிறது. காரசார வாக்குவாதம் சுமார் 10 கி.மீ தூரத்துக்கு நீடித்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், நடத்துனர் கோபிநாத் திடீரென பேருந்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் நெய்வேலியில் உள்ள மருத்துவமனைக்கு பேருந்தில் வைத்து, அவர் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே  இறந்தது தெரியவந்துள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், பயணிகளால் பிடித்துவைக்கப்பட்டிருந்த காவலர் பழனிவேலை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CUDDALORE #POLICE #CONDUCTOR