‘பாட்டி சடலம் அருகே கிடந்த எலுமிச்சை பழம்’.. காலேஜ் போய்ட்டு வீட்டுக்கு வந்த பேத்தி கண்ட காட்சி.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 16, 2022 01:47 PM

வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dharmapuri woman death at home in mysterious way police investigate

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இந்திராணி. இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவருகு ராஜேஸ்வரி என்ற மகளும், ரமேஷ் என்ற மகனும் உள்ளனர். இருவரும் அதே ஊரில் வசித்து வருகின்றனர். இதில் மகள் ராஜேஸ்வரியின் கணவர் வெளியூரில் வேலை செய்து வருவதால், மகளுக்கு துணையாக அவர்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் ராஜேஸ்வரியின் மகள் சுமித்ரா கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த சூழலில் நேற்று ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து பொள்ளாச்சியில் உள்ள மாசானியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் இந்திராணியின் மகன் ரமேஷ் மற்றும் மகள் ராஜேஸ்வரி ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அதனால் பாட்டி இந்திராணியும், பேத்தியும் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், மாலை கல்லூரி முடிந்து பேத்தி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பாட்டி ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அவர் கூச்சல் போடவும், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் இந்திராணியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே வீட்டில் நடத்திய சோதனையில், சடலத்தின் அருகே ஒரு கத்தியும், எலுமிச்சை பழமும் இருந்துள்ளது. மேலும் இந்திராணியின் காதில் இருந்த தோடும் இல்லாமல் இருந்துள்ளது. இந்திராணி உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு மந்திரம் போட்டு குணப்படுத்துபவர் என சொல்லப்படுகிறது.

அதனால் யாரேனும் மந்திரம் போடுவதற்காக வந்து, இந்திராணியை தாக்கி நகையை பறித்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வர வழைத்து தடயங்கள சேகரித்தனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DHARMAPURI #WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dharmapuri woman death at home in mysterious way police investigate | Tamil Nadu News.