Kadaisi Vivasayi Others

திருப்பூரில் சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்.. செல்போன் சிக்னல் மூலம் சிக்கிய இளைஞர்.. பரபரப்பு தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 11, 2022 02:52 PM

திருப்பூரில் சூட்கேஸில் இளம் சடலமாக கிடந்த வழக்கில் இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tiruppur woman body found in suitcase case one person arrested

திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள பொள்ளிகளிபலயம் அருகே சாக்கடை கால்வாயில் சூட்கேஸ் ஒன்று அநாதையாக கிடப்பதாக சில தினங்களுக்கு முன்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சாக்கடையில் கிடந்த சூட்கேஸை மீட்டனர். அந்த சூட்கேஸை திறந்தபோது கழுத்தை அறுத்து கொலை செய்த நிலையில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதனை அடுத்து இளம் பெண்ணின் சடலத்தை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் யார்?, அவரது ஊர் உள்ளிட்டவை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சூட்கேஸ் கிடந்த இடத்துக்கு அருகே உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்து அந்த சூட்கேஸை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.  இதனிடையே பெண்ணின் புகைப்படம் மூலம், அவர் குடியிருந்த வீட்டை போலீசார் கண்டுபிடித்து, அக்கம் பக்கத்தில் வசித்து வந்தவர்களை விசாரித்தனர். அதில், கொலையான பெண்ணின் பெயர் நேகா என்பதும், அவர் அபிஜித் என்பவருடன் வெள்ளியங்காடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக வசித்து வந்ததும் தெரியவந்தது. 

இந்த சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அபிஜித், தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் வீட்டை காலி செய்வதாகக் கூறி பொருள்களுடன் நேகாவை அடைத்து வைத்திருந்த சூட்கேஸையும் எடுத்துச் சென்று சாலையோரம் வீசியுள்ளார். இவருக்கு கெய்லால் சாவ்ரா என்பவர் உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரது செல்போன் எண்களை பின்தொடர்ந்ததில், அது இறுதியாக கர்நாடக எல்லையில் இருப்பை காட்டியுள்ளது. இதனை அடுத்து அப்பகுதிக்கு போலீசார் விரைந்தனர்.

Tiruppur woman body found in suitcase case one person arrested

இந்த நிலையில் கேய்லால் சாவ்ராவை (வயது 27) போலீசார் கைது செய்துள்ளனர். ஓசூர் அருகே பாத்தக்கோட்டை என்ற கிராமத்தில் வைத்து தனிப்படை போலீசார் இவரை கைது செய்ததாக கூறியுள்ளனர்.

Tags : #CRIME #TIRUPPUR #WOMAN #SUITCASE #ARRESTED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tiruppur woman body found in suitcase case one person arrested | Tamil Nadu News.