‘இன்று முதல் 5 நாட்களுக்கு’.. ‘கடற்கரை - தாம்பரம் இடையே’.. ‘மின்சார ரயில் சேவை ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 06, 2019 02:19 PM

பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரயில் சேவை இன்று முதல் 5 நாட்களுக்கு ஒரு பகுதி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Chennai Chengalpattu Tambaram Beach Electric Trains Cancelled

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இரவு 11.25, 11.45 மணி, செங்கல்பட்டு - கடற்கரை இடையே இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை - தாம்பரம் இடையே இரவு 11, 11.20, 11.40, 11.59 மணி, தாம்பரம் - கடற்கரை இடையே இரவு 10.25, 10.45, 11.25, 11.45 மணி, செங்கல்பட்டு - கடற்கரை இடையே இரவு 10.15, 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் வருகிற 9ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை - செங்கல்பட்டு இடையே அதிகாலை 3.55, 4.35, 4.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் கடற்கரை - தாம்பரம் இடையே வரும் 10ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கடற்கரை - தாம்பரம் இடையே அதிகாலை 4.15 மணி, தாம்பரம் - கடற்கரை இடையே 3.55, 4.15, 4.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் வரும் 10ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #CHENNAI #ELECTRIC #TRAIN #CANCEL #CHENGALPATTU #TAMBARAM #BEACH #DETAILS