'யார கேட்டு உள்ள நுழைஞ்ச...? முதல்ல வெளிய போ...' 'தனியாக இருந்த பெண்ணிடம் நள்ளிரவில்...' 'கோவத்தில் தோசைக்கல்லை எடுத்து...' கொடூர சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jun 05, 2020 12:28 PM

திருப்பூரில் தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டில் இளைஞர் ஒருவர் நுழைந்ததால், உதவி கேட்டு கத்திய பெண்ணை அருகில் இருக்கும் தோசைக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

22 year old boy murder a woman by dosa tawa in tirupur

கர்நாடகாவை சேர்ந்த லட்சுமி(49) என்ற பெண்மணி தன் இரு பிள்ளைகள் மற்றும் கணவரோடு மைசூர், தரசிபுரா பகுதியில் வாழ்ந்து வந்தார். உடல்நலக் கோளாறால் கணவனை இழந்த லட்சுமி பிழைப்பிற்காக தன் இரு பிள்ளைகளுடன், திருப்பூர், பி.என்., ரோடு அருகே அண்ணா நகரில் தங்கி, கட்டட வேலை பார்த்து வந்துள்ளார்.

தன் சொந்த உழைப்பில் மகன் மற்றும் மகளுக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது பிள்ளைகள் இருவரும் வெளியூரில் வசித்து வருவதால், லட்சுமி மட்டும் திருப்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டுப் பக்கத்தில் குடியிருக்கும் சுரேஷ் என்பவரின் 22 வயதான மகன் பூபதி நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு தீடீரென கதவை கூட தட்டாமல் லட்சுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த லட்சுமி 'யார கேட்டு உள்ள நுழைஞ்ச, வெளியே போ' என்று கத்தி கூச்சல் போட தொடங்கியுள்ளார்.

லட்சுமியை தடுக்க முயன்ற பூபதி கோபமடைந்து அறையில் இருந்த தோசைக் கல்லை எடுத்து லட்சுமியின் தலையில் தாக்கினார். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொலைக் குறித்து அறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்குவந்து லட்சுமியின் உடலை மீட்டு, கொலைக்கு காரணமாகிய பூபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #TIRUPUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 22 year old boy murder a woman by dosa tawa in tirupur | Tamil Nadu News.