'திருப்பூரில்' கேட்ட 'பலத்த சத்தம்...' 'காரணம்' தெரியாததால் 'அச்சமடைந்த மக்கள்...' 'போலீசாருக்கும் குழப்பம்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | May 28, 2020 04:34 PM

திருப்பூரில் இன்று காலை வெடி வெடித்தது போன்ற பலத்த சத்தம் பல இடங்களில் கேட்டது. இது மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

The public was shocked by the loud noise in Tirupur

திருப்பூர் மாவட்டத்தில், காங்கேயம், பல்லடம், அருள்புரம், மங்களம், அவினாசிபாளையம், பொங்கலூர், கொடுவாய், அனுப்பர்பாளையம், நெருப்பெரிச்சல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10: 30 மணியளவில் வெடிவெடிப்பது போன்ற பலத்த சத்தம் கேட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அச்சத்துடன் பார்த்தனர். நிலநடுக்கம் ஏதும் ஏற்பட்டிருக்கலாமோ எனவும் அச்சம் தெரிவித்தனர். சத்தம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"நிலநடுக்கம் போன்ற எந்த அதிர்வுகளும் பதிவாகவில்லை. வெடி சத்தம் ஏதாவது இருக்கலாம்" என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The public was shocked by the loud noise in Tirupur | Tamil Nadu News.