WATCH VIDEO: தொடர்ந்து 'சதம்' அடிக்க.. 'இட்லியும்-சட்னி'யும் தான் காரணம்.. ரகசியத்தை 'உடைத்த' வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 11, 2019 04:38 PM

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய வீரர் மயங்க் அகர்வால் முதல் போட்டியில் ஒரு இரட்டை சதம், 2-வது போட்டியில் ஒரு சதம் என மொத்தம் 3 சதங்கள்  அடித்து அசத்தியுள்ளார். இவரின் சதத்தினால் இந்திய அணி தொடர்ந்து வலுவான நிலையில் இருக்கிறது. இந்தநிலையில் போட்டி முடிந்தபின் தனது வெற்றிக்கான காரணம் குறித்து மயங்க் அகர்வால் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

Mayank Agarwal Reveals The Secret Behind His Test Centuries

பேட்டியெடுத்த புஜாராவிடம் தனது வெற்றி ரகசியம் குறித்து அகர்வால் கூறுகையில், '' 2 இட்லி, தேங்காய் சட்னி, சாம்பார் ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்கிறேன். அத்துடன் ரன்னிங், தியானம் செய்கிறேன்,'' என தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்து சதங்கள் அடித்ததில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அகர்வால் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், விராட் கோலி என அடுத்தடுத்து இந்திய வீரர்கள் தொடர்ந்து இரட்டை சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET #IPL