VIDEO: 5 விக்கெட்டுகள்.. ஸ்டம்பை 'தெறிக்க' விட்ட பந்து.. பிரியாணி சாப்பிட்டு.. விக்கெட் வேட்டை நடத்திய வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 07, 2019 06:18 PM

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி 10.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதில் 4 விக்கெட்டுகள் கிளீன் பவுல்ட் ஆகும். அதிலும் ஒரு விக்கெட்டிற்கு ஸ்டெம்புகளே தெறித்து விழுந்தது.

 

Rohit Sharma Reveals The Secret Behind Mohammed Shami\'s Success
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Expect the Hitman to come up with such gems. This one is for Shami 😜😁😂 #TeamIndia #INDvSA @paytm

A post shared by Team India (@indiancricketteam) on

இதன் மூலம் இந்திய வீரர்களில் ஒரே இன்னிங்க்ஸில் நான்கு பவுல்டு வுட் விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் ஷமி. பும்ரா கடந்த மாதம் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்த சாதனையை முதன்முறையாக செய்து இருந்தார்.

 

இந்தநிலையில் ஷமியின் விக்கெட் வேட்டை ரகசியத்தை ஹிட்மேன் ரோஹித் சர்மா போட்டு உடைத்துள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது,''ஷமி பிரெஷ்ஷாக இருந்தால் என்ன செய்வார் என்று தெரியும். அப்புறம் கொஞ்சம் பிரியாணியுடன்,'' என சொல்லி ஷமி பிரியாணி சாப்பிட்டு தான் விக்கெட் வேட்டை நடத்தினார் என்ற ரகசியத்தை போட்டு உடைத்து விட்டார். இதனைக்கேட்டு அனைவரும் சிரித்து விட்டனர்.முகம்மது ஷமி ஒரு தீவிரமான பிரியாணி பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.