போதை மருந்து பயன்படுத்திய விவகாரம் பிரபல கிரிக்கெட் வீரர் விளையாட தடை..! உலகக் கோப்பை வாய்ப்பு பறிபோகுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 27, 2019 12:20 AM

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் போதை மருத்து பயன்படுத்தியதிற்காக 21 நாட்கள் விளையாட தடை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

England cricketer Alex Hales banned for recreational drug use

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 30 வயதான அலெக்ஸ் கேல்ஸ் கடந்த 2011 ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2014 -ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அலெக்ஸ் கேல்ஸ் போதை மருத்து பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை 21 நாட்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்து இங்கிலீஸ் கிரிக்கெட் அமைப்பு(English Cricket Board) அறிவித்துள்ளது என கிரிக்பஸ்ஸில்(cricbuzz) குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அலெக்ஸ் கேல்ஸ் வரயிருக்கும் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடரில் விளையாட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் அவர் உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

Tags : #CRICKET #PLAYER #BANNED