legend updated

பணம் இல்லாமல்.. ‘மனைவியை வைத்து சூதாடிய கொடூரம்..’ தோற்ற கணவன் செய்த.. ‘பதைபதைக்க வைக்கும் காரியம்..’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 02, 2019 07:10 PM

உத்தரப் பிரதேசத்தில் கணவனிடம் பணமில்லாததால் மனைவியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP man bets wife loses lets friends gang rape her twice

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நண்பர்களுடன் வீட்டில் குடித்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சூதாட்டத்தில் அவரிடம் இருந்த பணமெல்லாம் தீர்ந்துபோக கடைசியாக தன்னுடைய மனைவியைப் பணயமாக வைத்து விளையாடியுள்ளார். அதிலும் அவர் தோற்றுப்போக உடன் விளையாடிய நண்பர் மற்றும் அவருடைய உறவினர் இருவரும் சேர்ந்து தோற்றவரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதற்கு அந்த கணவரும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ந்துபோன அவருடைய மனைவி அவரை விட்டுத் தனியே பிரிந்து சென்றுள்ளார். அப்போதும் அவரை விடாமல் துரத்திச் சென்ற அந்த நபர் மனைவியிடம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு அவரைத் திரும்ப அழைத்து வந்துள்ளார். ஆனால் அவர் அழைத்து வரும் வழியிலேயே மீண்டும் மனைவியை அதே இரண்டு நபர்களிடம் கொண்டுபோய் விட்டுள்ளார். அவர்கள் இருவரும் மீண்டும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண் போலீஸில் புகார் அளிக்க அவர்கள் அதைப் பதிவு செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் நீதிமன்றத்தை நாடிய பிறகு அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கணவனே மனைவியை சூதாட்டத்தில் வைத்து தோற்று, பின் நண்பர்கள் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #UTTARPRADESH #HUSBANDANDWIFE #GAMBLING #ALCOHOL #GANGRAPE #SHOCKING